Asianet News TamilAsianet News Tamil

பைக்கில் ஜாலியாக கோவளம் பீச்சுக்கு சென்று கும்மாளம் அடிக்க சென்ற கள்ளக்காதல் ஜோடி.. வழியில் நடந்த பரிதாபம்..!

கோவளம் கடற்கரைக்கு சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் கள்ளக்காதலர்கள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

bike accident...illegal affair couple dead
Author
Chennai, First Published Dec 13, 2020, 2:31 PM IST

கோவளம் கடற்கரைக்கு சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் கள்ளக்காதலர்கள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் அடுத்த மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் (28). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தையுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். இவர் வேலை செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலூர் மாவட்டம் காகித பட்டறை பகுதியை சேர்ந்த துர்காதேவி (25) என்பவரும் வேலை பார்த்து வந்தார். துர்காதேவிக்கு திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

bike accident...illegal affair couple dead

ஒரே கம்பெனியில் வேலை செய்து வந்ததாதல் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காலபோக்கில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், துர்காதேவி சொந்த ஊருக்கு செல்வதாகவும், தன்னுடன் துணைக்கு வருமாறும் வசந்தகுமாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, இருவரும் வேலூர் வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம் சென்றுள்ளனர். நேற்று காலை இவர்கள் வாலாஜாபாத், வண்டலூர் வழியாக இருசக்கர வாகனத்தில் கோவளம் வந்துக்கொண்டிருந்தனர். அப்போது, முன்னால் சென்ற கார் மற்றும் லாரிக்கு நடுவே முந்திச் செல்ல முயன்றுள்ளனர். 

bike accident...illegal affair couple dead

அப்போது,எதிர்பாராத விதமாக லாரியின் நடுவில் மோதியதால் தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அவர்கள் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios