குடிபோதையில் ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பேர் பயணம்... 2 பேர் உயிரிழந்த பரிதாபம்..!
சென்னையில் குடிபோதையில் ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பேர் அமர்ந்து கொண்டு அதிகவேகமாக சென்ற போது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் குடிபோதையில் ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பேர் அமர்ந்து கொண்டு அதிகவேகமாக சென்ற போது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பட்டினபாக்கம் பகுதியில் உள்ள நொச்சிநகரை சேர்ந்த 22 வயதாகும் வெங்கடேசன் என்பவர் திருவான்மியூரில் உள்ள ஐடி கம்பெனியில் எலெக்டிரிக்கல் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று இரவு தனது நண்பர்கள் விஷ்ணு, பாவாடைராயன், பாரதிராஜா ஆகிய 4 பேர் குடிபோதையில் சாந்தோம் நோக்கி அதிவேகமாக இருசக்கரவாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர்.
அப்போது சாலையில் நடுவே அமைந்திருந்த வேகத்தடை மீது இருசக்கர வாகனம் வேகமாக ஏறி இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மரத்தின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் விஷ்ணுவும், வெங்கடேசனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முத்து மற்றும் பாரதிராஜா ஆகியோருக்கு கால் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 2 பேர் உடலை மீட்ட போலீசார் பிரதே பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.