Asianet News TamilAsianet News Tamil

மகளால் சிக்கலில் மாட்டிய சூப்பர் ஸ்டார்... உதயநிதியை அடுத்து ரஜினியை கரம் வைக்கும் சென்னை மாநகராட்சி..!

கேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்பதை ஆய்வு செய்துதான் கூற முடியும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

actor rajinikanth car ride issue...chennai corporation commissioner
Author
Chennai, First Published Jul 22, 2020, 2:02 PM IST

கேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்பதை ஆய்வு செய்துதான் கூற முடியும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், இ-பாஸ் வாங்கினால் மட்டுமே ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல முடியும் என்ற நடைமுறை தமிழகத்தில் உள்ளது. இ-பாஸ்க்கு விண்ணப்பித்தாலும் பாஸ் கிடைப்பதில்லை என பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

actor rajinikanth car ride issue...chennai corporation commissioner

இந்நிலையில், ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தினசரி 12 ஆயிரம் பேருக்கு குறையாமல் சோதனை நடத்தப்படுகிறது. ஆயிரம் பேருக்கு பாசிட்டிவ் வந்தால் 10,000 பேருக்கு சோதனைகளை நடத்த வேண்டும் என்பது விதியாகும். இதுவரை 5.70 லட்சம் பேருக்கு சோதனை செய்துள்ளோம். இன்னும் 10-15 நாட்களில் சென்னையின் 10 சதவீத மக்கள் தொகை அளவான 8 லட்சம் பேருக்கு சோதனையை நடத்திவிடுவோம். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே பாசிட்டிவை குறைக்க முடியும். சென்னைக்கு வர விரும்பும் நபர்கள் முறையான ஆவணங்களுடன் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம். 

actor rajinikanth car ride issue...chennai corporation commissioner

மேலும், சென்னைக்கு வர வேண்டும் என விரும்பும் நபர்கள் முறையாக இ-பாஸை ஆவணங்கள் உடன் பதிவு செய்யலாம். ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பதை ஆய்வு செய்தே கூற முடியும். மீண்டும் கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை வருவதற்கும் ரஜினி இ-பாஸ் வாங்கினாரா என்பதும் ஆய்வு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios