Asianet News TamilAsianet News Tamil

8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தருமபுரி, சேலம், விழுப்புரம், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். அக்டோபர் 1-ம் தேதி வரை தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 9 செ.மீ., மழையில் இதுவரை 8 செ.மீ., மழை கிடைத்துள்ளது. 

8 district heavy rain alert... meteorological center information
Author
Tamil Nadu, First Published Oct 18, 2019, 1:40 PM IST

தமிழகத்தில் வரும் 21, 22-ம் தேதிகளில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் கூறுகையில்;- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று முதல் 20-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 

8 district heavy rain alert... meteorological center information

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தருமபுரி, சேலம், விழுப்புரம், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். அக்டோபர் 1-ம் தேதி வரை தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 9 செ.மீ., மழையில் இதுவரை 8 செ.மீ., மழை கிடைத்துள்ளது. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

8 district heavy rain alert... meteorological center information

கடந்த 24 மணிநேரத்தில் சென்னை அயனாவரத்தில் 13 செ.மீ., பெரம்பூரில் 12 செ.மீ., டி.ஜி.பி.அலுவலகம் 9 செ.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூரில் 8 செ.மீ., பொள்ளாச்சியில் 7 செ.மீ., அம்பத்தூரில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios