Asianet News TamilAsianet News Tamil

மகிழ்ச்சியான செய்தி.. இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச டிஸ்சார்ஜ்.. சென்னையில் பாதிப்பு குறைவு..!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594ஆக உயர்ந்துள்ளது.

3616 new corona cases confirmed in tamil nadu..4545 people Discharge
Author
Chennai, First Published Jul 7, 2020, 7:32 PM IST

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594ஆக உயர்ந்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,594ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,180 பேர் ஆண்கள், 1,436 பேர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்த 129  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

3616 new corona cases confirmed in tamil nadu..4545 people Discharge

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 71,000ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிப்பு பெருமளவு குறைந்து வருகிறது. அதேபோல், இன்று மட்டும் 66 பேர் உயிரிழந்தனர். இதில்,15 பேர் தனியார் மருத்துவமனையிலும், 46 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.  இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,636ஆக அதிகரித்துள்ளது. 

3616 new corona cases confirmed in tamil nadu..4545 people Discharge

இன்று 4,545 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 71,116ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 34,782 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,76,497ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் பாதிப்பு குறைந்து வந்தாலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios