Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரே நாளில் 3 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..! இன்று 2236 பேர் டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 3509 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70977ஆக அதிகரித்துள்ளது. 
 

3509 new corona cases confirmed in tamil nadu on june 25
Author
Chennai, First Published Jun 25, 2020, 6:29 PM IST

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 3509 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70977ஆக அதிகரித்துள்ளது. 
  
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி, தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இன்று 32,543 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 3509 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70977ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றுதான் முதல் முறையாக ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1834 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 47650ஆக அதிகரித்துள்ளது.

3509 new corona cases confirmed in tamil nadu on june 25

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2236 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 39999ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 56.35% பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று 45 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 911ஆக அதிகரித்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios