துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி இறுதிச் சுற்றிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிப் போட்டி நேற்று நடைப்பெற்றது.
இந்த அரையிறுதியில் கரோலின் வோஸ்னியாக்கி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் லத்வியாவின் அனாஸ்டாஸியா செவஸ்டோவாவை வீழ்த்தினார்.
இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றிற்கு முன்னேற்றம் அடைந்தார்,.
மகளிர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்ஸா - செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி 4-6, 3-6 என்ற நேர் செட்களில் ரஷியாவின் எக்டெரினா மகரோவா - எலினா வெஸ்னினா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
