Asianet News TamilAsianet News Tamil

அடம்பிடித்த கோலி.. அடக்கிய ரோஹித்!! ஐபிஎல்லால் எழுந்த சர்ச்சை

அடுத்த ஐபிஎல் சீசன் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அந்த கோரிக்கையிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் முரண்பட்டதால் விராட் கோலியின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

virat kohli recommendation to bcci regarding fast bowlers rest in ipl
Author
India, First Published Nov 9, 2018, 9:54 AM IST

அடுத்த ஐபிஎல் சீசன் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அந்த கோரிக்கையிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் முரண்பட்டதால் விராட் கோலியின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிசிசிஐ-யின் நிர்வாகக்குழுவிடம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு கோரிக்கையை முன்வைத்தார். ஹைதராபாத்தில் நடந்த நிர்வாகக்குழுவுடனான ஆலோசனையின்போது, ஐபிஎல் முடிந்ததும் உலக கோப்பை தொடங்குவதால், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு அடுத்த ஐபிஎல் சீசனில் முழு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

virat kohli recommendation to bcci regarding fast bowlers rest in ipl

அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் உலக கோப்பை இங்கிலாந்தில் தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடைபெறுகிறது. உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுடன் இந்திய அணி மோதும் முதல் போட்டி ஜூன் 5ம் தேதி தொடங்குகிறது. எனவே இடையில் 15 நாட்கள் இடைவெளி இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அதேபோல ரோஹித் சர்மாவும் விராட் கோலியின் கருத்தை ஏற்கவில்லை என்று அதே அதிகாரி கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கும் இறுதி போட்டிக்கும் தகுதி பெறும் நிலையில், அந்த அணியின் நட்சத்திர பவுலரான பும்ரா உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் மும்பை அணியில் ஆடுவார் என்றும் அவருக்கு ஓய்வளிக்க மாட்டோம் என்றும் ரோஹித் சர்மா தெரிவித்துவிட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

virat kohli recommendation to bcci regarding fast bowlers rest in ipl

வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல்லில் அனைத்து போட்டிகளிலும் ஆடப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் அணிகளிலும் உடற்தகுதி நிபுணர்கள் இருக்கிறார்கள் எனும்போது அவர்கள் ஐபிஎல்லில் ஆடுவதில் எந்த பிரச்னையும் இல்லை என்பதே பிசிசிஐயின் உணர்வாக உள்ளதாக தெரிகிறது. எனவே விராட் கோலியின் கோரிக்கை நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios