Unable to bear the defeat of India the cricket fan fled before the train and committed suicide

பாகிஸ்தான் உடனான ஆட்டத்தில் இந்தியக் கிரிக்கெட் அணி தோல்வி அடைந்ததைத் தாங்க முடியாமல், வங்கதேசத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பெற்றியது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர், ஹசன் அலி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஃபகார் ஸமான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா தோற்றதைத் தாங்க முடியாமல், வங்கதேசத்தின் ஜமல்பூரில் உள்ள 25 வயது இந்திய கிரிக்கெட் ரசிகரான பித்யுத், நேற்றிரவு இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்தத் தகவலை வங்கதேச காவல்துறையும் உறுதி செய்து அறிவித்துள்ளது.