சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனத்தின் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் பூஜா கட்கர் வெண்கலம் வென்றார்.
தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முன்னாள் ஆசிய சாம்பியனான பூஜா கட்கர், இறுதிச்சுற்றில் 228.8 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் உலகக் கோப்பையில் முதல் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார் பூஜா கட்கர்.
இதே பிரிவில் சீனாவின் மெங்யாவ் ஷி 252.1 புள்ளிகளுடன் தங்கம் வென்றதோடு, புதிய உலக சாதனையும் படைத்தார்.
மற்றொரு சீன வீராங்கனையான டாங் லிஜீ 248.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
