Tamil Nadu Karnataka boys to take the ball in the World Cup
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிகாரப்பூர்வமாக பந்து கொண்டு செல்பவர்களாக தமிழ்நாடு, கர்நாடகாவை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடக்கவுள்ளது. இந்தியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனம், பிஃபாவின் அதிகாரப்பூர்வ பங்குதாரராக உலகக் கோப்பையில் இடம் பெற்றுள்ளது.
கால்பந்து ஆட்டங்களில் சிறுவர்களே பந்துகளை கொண்டுச் சென்று வழங்குவது வழக்கம். இந்த நிலையில் 10 முதல் 14 வயதுள்ள 1600 சிறுவர்கள் இதற்கான தகுதிச் சுற்றில் இடம் பெற்றனர்.
குர்கானில் கடந்த மாதம் நடந்த தேர்வுப் போட்டியில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 50 சிறுவர்களில் இருந்து இருவரை பேரை தேர்வு செய்தார்.
அதன்படி கர்நாடகத்தைச் சேர்ந்த 10 வயது ரிஷி தேஜ், தமிழகத்தைச் சேர்ந்த 11 வயது நத்தானியா ஜான் ஆகியோர் இதற்காக ரஷியா செல்கின்றனர்.
பிரேசில் - கோஸ்டா ரிகா மற்றும் பனாமா - பெல்ஜியம் அணிகள் இடையே நடைபெறும் ஆட்டங்களில் இச்சிறுவர்கள் பந்தை கொண்டுசெல்வர்.
உலகம் முழுவதும் இருந்து 64 பள்ளிச் சிறுவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
