Srikanth is the only Indian who won a three Badminton tournament

சூப்பர் சீரிஸ் பிரிமீயர், சூப்பர் சீரிஸ், கிராண்ட்ப்ரீ கோல்டு ஆகிய மூன்று பாட்மிண்டன் போட்டிகளிலும் பட்டம் வென்ற ஒரே இந்தியர் ஸ்ரீகாந்த் மட்டுமே என்று புகாழாரம் சூட்டியுள்ளார் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உலக ஹாக்கி லீக் இலண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இதனையடுத்து இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல்.

மேலும் அவர் கூறியது: “இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளது.

இதேபோல் இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் ஸ்ரீகாந்துக்கும் வாழ்த்துகள்.

சூப்பர் சீரிஸ் பிரிமீயர், சூப்பர் சீரிஸ், கிராண்ட்ப்ரீ கோல்டு ஆகிய மூன்று பாட்மிண்டன் போட்டிகளிலும் பட்டம் வென்ற ஒரே இந்தியர் ஸ்ரீகாந்த் மட்டுமே. அவரை நான் மட்டுமல்ல, இந்த நாடே வாழ்த்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.