south africa losing wickets frequently
முதலில் பேட்டிங் செய்துவரும் தென்னாப்பிரிக்க அணி, இந்திய பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் ஹாசிம் ஆம்லா ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கத்தில் புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் சிறப்பாக பந்துவீசினர். இருவரின் வேகத்தையும் எதிர்கொள்ள முடியாமல் ஆம்லாவும் டி காக்கும் திணறினர். பின்னர் பாண்டியாவின் பந்துகளில் ஒருசில பவுண்டரிகள் அடித்தனர்.

ஆனாலும் அவர்களின் ஆட்டம் நீடிக்கவில்லை. புவனேஷ்வர் குமாரின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து முதல் ஆளாக வெளியேறினார். அவர் அவுட்டாகும்போது தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 39.
தென்னாப்பிரிக்கா, 51 ரன்கள் எடுத்திருந்தபோது சாஹலின் சுழலில் டி காக் அவுட்டானார்.
அதற்கு அடுத்த ஓவரிலேயே குல்தீப் யாதவின் சுழலில் மார்க்ரம் மற்றும் மில்லர் ஆகிய இருவரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 51 ரன்னிலேயே 3 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா இழந்தது.

15 ஓவருக்கு உள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்க அணி திணறிவருகிறது. தற்போது ஜோண்டோ மற்றும் டுமினி ஆகியோர் களத்தில் ஆடிவருகின்றனர்.
