அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் பிரபல CSK வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ராபின் உத்தப்பா.
கர்நாடகாவை சேர்ந்த உத்தப்பா (36) 20 ஆண்டுகளாய் சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர்களில் பெங்களூரு மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். இவர் 46 ஒருநாள் போட்டிகளிலும் 13 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.
இவர் இந்திய அணிக்காக 2007 டி20 உலக கோப்பையையும், ஐபிஎல் தொடரில் 2014ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காகவும் 2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் கோப்பைகளை வென்ற அணியில் இவர் விளையாடினார் என்பது குறிப்பிடதக்கது.