புரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸை மண்னைக் கவ்வ வைத்தது புணேரி பால்டான்…
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 65-வது ஆட்டத்தில் புணேரி பால்டான் அணி 42-37 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 65-வது ஆட்டம் புணேரி பால்டன் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் இடையே கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய புணே அணி, முதல் பாதியில் 26-12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 2-ஆவது பாதி ஆட்டத்தில் தெலுகு அணி புள்ளிகள் இடைவெளியை குறைக்க முடிந்த போதிலும், தோல்வியை தவிர்க்க முடியாமல் 37-42 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்ந்தது.
இதில் புணே அணி 18 ரைடு புள்ளிகள், 15 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் அவுட் புள்ளிகள், 3 கூடுதல் புள்ளிகள் பெற்றது.
தெலுங்கு அணி 20 ரைடு புள்ளிகள், 10 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 3 கூடுதல் புள்ளிகள் பெற்றது.
புணே தரப்பில் அதிகபட்சமாக அதன் ரைடர் தீபக் ஹூடா 20 ரைடுகள் சென்று 9 புள்ளிகள் பெற்றார். அணியின் பின்கள வீரர் கிரீஷ் மாருதி 6 டேக்கிள் புள்ளிகளை கைப்பற்றினார்.
தெலுங்கு தரப்பில் கேப்டன் ராகுல் செளதரி அதிகபட்சமாக 19 ரைடுகளில் 9 புள்ளிகளை கைப்பற்றினார். பின்கள வீரர் சோம்பீர் 4 புள்ளிகளை வென்றார்.
இந்த ஆட்டத்தில் புணே அணி தடுப்பாட்டத்தின் மூலம் புள்ளிகளை அதிகம் சேகரிக்க, தெலுங்கு அணி ரைடு மூலம் அதிக புள்ளிகள் பெற்றது.