Asianet News TamilAsianet News Tamil

புரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸை மண்னைக் கவ்வ வைத்தது புணேரி பால்டான்…

Pro Kabaddi Thaneri Baldan putting the tantas to the tune ...
Pro Kabaddi Thaneri Baldan putting the tantas to the tune ...
Author
First Published Sep 8, 2017, 9:23 AM IST


புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 65-வது ஆட்டத்தில் புணேரி பால்டான் அணி 42-37 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 65-வது ஆட்டம் புணேரி பால்டன் மற்றும் தெலுங்கு  டைட்டன்ஸ் இடையே கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய புணே அணி, முதல் பாதியில் 26-12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 2-ஆவது பாதி ஆட்டத்தில் தெலுகு அணி புள்ளிகள் இடைவெளியை குறைக்க முடிந்த போதிலும், தோல்வியை தவிர்க்க முடியாமல் 37-42 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்ந்தது.

இதில் புணே அணி 18 ரைடு புள்ளிகள், 15 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் அவுட் புள்ளிகள், 3 கூடுதல் புள்ளிகள் பெற்றது.

தெலுங்கு அணி 20 ரைடு புள்ளிகள், 10 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 3 கூடுதல் புள்ளிகள் பெற்றது.

புணே தரப்பில் அதிகபட்சமாக அதன் ரைடர் தீபக் ஹூடா 20 ரைடுகள் சென்று 9 புள்ளிகள் பெற்றார். அணியின் பின்கள வீரர் கிரீஷ் மாருதி 6 டேக்கிள் புள்ளிகளை கைப்பற்றினார்.

தெலுங்கு தரப்பில் கேப்டன் ராகுல் செளதரி அதிகபட்சமாக 19 ரைடுகளில் 9 புள்ளிகளை கைப்பற்றினார். பின்கள வீரர் சோம்பீர் 4 புள்ளிகளை வென்றார்.

இந்த ஆட்டத்தில் புணே அணி தடுப்பாட்டத்தின் மூலம் புள்ளிகளை அதிகம் சேகரிக்க, தெலுங்கு அணி ரைடு மூலம் அதிக புள்ளிகள் பெற்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios