புரோ கபடி: தபங் டெல்லியை திணறடித்தது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்…
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 82-வது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 36-25 என்ற புள்ளிகள் கணக்கில் தபங் டெல்லி அணியை வீழ்த்தியது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 82-வது ஆட்டம் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி – தபங் டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று இரவு நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது ஜெய்ப்பூர். இதனால் தடுமாற்றத்துடன் ஆடிவந்த டெல்லி முதல் பாதியில் 9-18 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்தது. தொடர்ந்து
நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் டெல்லியை திணறடித்த ஜெய்ப்பூர் இறுதியில் 11 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது.
ஜெய்ப்பூர் தரப்பில் அதிகபட்சமாக அதன் ரைடர் பவன் குமார் 17 முறை ரைடு சென்று 6 புள்ளிகளை பெற்றார். பின்கள வீரர் சித்தார்த் 5 டேக்கிள் புள்ளிகளை வென்றார்.
டெல்லி தரப்பில் அபோல்ஃபஸல் 12 ரைடுகளில் 5 புள்ளிகள் கைப்பற்றினார். தடுப்பாட்டக்காரர் தபஸ் பால் 3 டேக்கிள் புள்ளிகளை எடுத்தார்.
இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 17 ரைடு புள்ளிகள், 15 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 2 கூடுதல் புள்ளிகள் பெற்றது.
டெல்லி அணி 15 ரைடு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், ஒரு கூடுதல் புள்ளி பெற்றது.