Pakistan has been able to bring balance to its own soil ...
நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் ஆட்டம் நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 18.3 ஓவர்களில் 153 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தானில் அதிகபட்சமாக ஃபகார் ஜமான் 50 ஓட்டங்கள் எடுத்தார். பாபர் ஆஸம் 50 ஓட்டங்கள் , ஹசன் அலி 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் பென் வீலர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்செல் சேன்ட்னர் 37 ஓட்டங்கள் , பென் வீலர் 30 ஓட்டங்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் சொற் ரன்களில் வீழ்ந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஃபஹீம் அஷ்ரஃப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஃபகார் ஜமான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியை அடுத்து மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்ததால், தொடர் சமநிலையில் உள்ளன.
