Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணியை எளக்காரமா பேசிய பாகிஸ்தான் வீரர்!! களத்துல பாரு தம்பி நாங்க யாருனு தெரியும்

விராட் கோலி இல்லாத இந்திய அணியை குறைத்து மதிப்பிட்டுள்ளார் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக். 
 

pakistan cricketer imam ul haq opinion about kohli less indian team
Author
UAE, First Published Sep 14, 2018, 3:15 PM IST

விராட் கோலி இல்லாத இந்திய அணியை குறைத்து மதிப்பிட்டுள்ளார் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக். 

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும். உலகளவில் எதிர்பார்ப்புகள் எகிறிவிடும். போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இரு அணிகளுமே வெற்றிக்காக வெறித்தனமாக ஆடும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் சர்வதேச தொடர்களை தவிர மற்ற போட்டிகளில் ஆடுவதில்லை. அதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் ஒருசில போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு எகிறுகின்றன. கடந்த ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியதுதான் கடைசி. அந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்து, தொடரை இழந்தது. 

அதன்பிறகு, ஓராண்டுக்கு பிறகு ஆசிய கோப்பை தொடரில் வரும் 19ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் வீரர்களுக்கு அப்பாற்பட்டு ரசிகர்கள் மற்றும் இரு நாட்டினருக்கும் அது மிகவும் முக்கியம். 

pakistan cricketer imam ul haq opinion about kohli less indian team

ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த தொடரில் விராட் கோலி இல்லாததால் பாகிஸ்தான் அணி சற்று ஆறுதலாக உள்ளது. எனினும் இந்திய அணி ரோஹித் சர்மா, தவான், ராகுல், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோருடன் வலுவாக உள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஜமான் மற்றும் ஹசன் அலி ஆகியோரும் அந்த அணி சார்பில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அப்பாற்பட்டு உலக கிரிக்கெட் ரசிகர்களே எதிர்நோக்கும் இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, அந்த அணி வீரர்கள் ஹசன் அலி, ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வீரர் இமாம், இந்தியாவிற்கு எதிராக ஆடவேண்டும் என்பது எனது கனவு. இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக எதையாவது செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணமாக உள்ளது. எனது எண்ணம் மட்டுமல்ல; ஒவ்வொரு பாகிஸ்தான் வீரரின் எண்ணமும் அதுதான். விராட் கோலி இல்லாத இந்திய அணி 50% பலத்தை இழந்துவிட்டது என இமாம் தெரிவித்துள்ளார். 

விராட் கோலி இல்லாத இந்திய அணி, பலத்தை இழந்துள்ளதா? அல்லது கோலி இல்லாமலும் இந்திய அணி சிறந்த அணியா? என்பது போட்டியில் தெரிந்துவிடும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios