Asianet News TamilAsianet News Tamil

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்: உத்தரகண்டை வீழ்த்தி அதிரடி காட்டியது கர்நாடகா...

National Basketball Championship Uttarakhand staged a storm in Karnataka
National Basketball Championship Uttarakhand staged a storm in Karnataka
Author
First Published Jan 19, 2018, 10:47 AM IST


தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் உத்தரகாண்ட் அணியை 85-83 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது கர்நாடக அணி.

சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 68-ஆவது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் 2-வது நாளான நேற்று ஆடவருக்கான 'ஏ' பிரிவு ஆட்டத்தில் கர்நாடகம் 85-83 என்ற கணக்கில் உத்தரகண்டை வென்றது. கர்நாடக தரப்பில் அரவிந்த் அதிகமாக 34 புள்ளிகள் பெற்றார்.

இதர ஆட்டங்களில் கேரளம் 87-72 என்ற கணக்கில் ராஜஸ்தானையும், 'எஃப்' பிரிவு  ஆட்டத்தில் மேற்கு வங்கம் 54-49 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தையும் வென்றது.

அதே பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் உத்தரப் பிரதேசம் 67-57 என்ற கணக்கில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது. உத்தர பிரதேச வீரர் புல்கிட் அதிகமாக 15 புள்ளிகளை கைப்பற்றினார்.

'டி' பிரிவில் டெல்லி அணி 68-50 என்ற கணக்கில் ஆந்திர பிரதேசத்தை வீழ்த்தியது. டெல்லி வீரர் கிரிக் யாதவ் அதிகபட்சமாக 15 புள்ளிகள் வென்றார்.

'சி' பிரிவில் சர்வீசஸ் அணி 87-26 என்ற கணக்கில் கோவாவையும், சத்தீஸ்கர் 45-19 என்ற கணக்கில் சிக்கிமையும் வீழ்த்தின.

மகளிருக்கான 'பி' பிரிவில் இந்திய ரயில்வே 98-47 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தை யும், 'சி' பிரிவில் உத்தரப் பிரதேசம் 59-30 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத்தையும் வீழ்த்தியது.

மகளிர் பிரிவில் சத்தீஸ்கர் அணி 93-85 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழக அணியை வீழ்த்தியது.

Follow Us:
Download App:
  • android
  • ios