தோனி மச்சானை பார்த்ததில் மகிழ்ச்சி - டிவைன் பிராவோ குறும்பு
5 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடைபெறவிருந்து. ஆனால் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் மகேந்திர சிங் தோனி, ஹிர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களை மேற்கு இந்திய தீவுகள் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டிவைன் பிராவோ சந்தித்துப் பேசினார்.
பின்னர் தனது டூவிட்டர் பக்கத்தில், “எனது மச்சான் தோனியை பார்த்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இரு அணிகளுக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் டிவைன் பிராவோ குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் விளையாடிய டிவைன் பிராவோ விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.