தென்னிந்திய கால்பந்து போட்டியில் கும்பகோணம் சாய் அணி சாம்பியன்…
தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டியில் கும்பகோணம் சாய் அணி சாம்பியன் வென்று அசத்தியது.
தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து மொத்தம் 22 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன.
இதன் இறுதிப் போட்டியில் கும்பகோணம் சாய் கால்பந்து அணியும், திருச்சி கேஆர்ஜி கால்பந்து அணியும் மோதின.
இதில், 2-0 என்ற கோல் கணக்கில் திருச்சி கேஆர்ஜி கால்பந்து அணியை வீழ்த்தி வாகைச் சூடியது கும்பகோணம் சாய் கால்பந்து அணி.
இதனையடுத்து மூன்றாம் இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் சேலம் வர்ஷா கால்பந்து அணியும், தஞ்சாவூர் பூமி கால்பந்து அணியும் மோதியதில் 5-4 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் பூமி கால்பந்து அணியை தோற்கடித்து மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு அரசு பொறியியல் கல்லூரி துணைத் தலைவர் தி.செந்தில்குமார், திருவாரூர் தடகள சங்கத் துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.