Asianet News TamilAsianet News Tamil

முதல் அணியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா…

kolkata became-the-first-team-to-progress-to-the-final
Author
First Published Dec 14, 2016, 11:27 AM IST


இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் (ஐஎஸ்எல்) இந்த சீசனில், அட்லெடிகோ டி கொல்கத்தா முதல் அணியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

முன்னதாக, மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியின் 2-ஆவது சுற்றில் மும்பை சிட்டி-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தின் இறுதி வரையில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. எனினும், முதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இதனிடையே, தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ள 2-ஆவது அரையிறுதியின் 2-ஆவது சுற்றில் டெல்லி டெனமோஸ்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை சந்திக்கும்.

இன்றைய ஆட்டமான, 2-ஆவது அறையிறுதி டெல்லி-கேரளா இடையே டெல்லியில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios