Asianet News TamilAsianet News Tamil

சர்வதேச பாட்மிண்டன்: இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..

International Badminton India HS Pranai PV Sindhu progress to the next round
International Badminton India HS Pranai PV Sindhu progress to the next round
Author
First Published Mar 17, 2018, 12:28 PM IST


சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் காலிறுதிச்சுற்றுக்கும் , பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறினர்.

சர்வதேச பாட்மிண்டன் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில்,  பிரணாய் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் முன்னாள் 3-ஆம் நிலை வீரரான தாய்லாந்தின் டாமி சுகியார்டோவை 21-10, 21-19 என்ற செட்களில் வென்றார். 

காலிறுதியில் சீனாவின் ஹியுவாங் யுக்ஸியாங்கை எதிர்கொள்கிறார் பிரணாய். 

ஹியுவாங் யுக்ஸியாங் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21-11, 15-21, 22-20 என்ற செட்களில் இந்தியாவின் ஸ்ரீகாந்தை வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். அவர் தனது காலிறுதியில் ஜப்பானின் நஸாமி ஒகுஹராவை 20-22, 21-18, 21-18 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். இது, நஸாமிக்கு எதிராக சிந்து பதிவு செய்யும் 5-ஆவது வெற்றியாகும்.

அதேபோன்று, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிரக் ஷெட்டி இணை 16-21, 21-16, 21-23 என்ற செட்களில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் மதியாஸ் போ - கார்ஸ்டென் மோகென்சென் இணையிடம் தோல்வி கண்டது.

மற்றொரு பிரிவான கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை 6-21, 10-21 என்ற செட்களில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் வாங் யிலியு-ஹுவாங் டாங்பிங் ஜோடியிடம் தோற்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios