மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றார்.

மலேசியாவின் சாராவாக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சாய்னா 22-20, 22-20 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவாங்கை தோற்கடித்தார். இதன்மூலம் தனது பாட்மிண்டன் வாழ்க்கையில் 23-ஆவது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் சாய்னா.

26 வயதான சாய்னா, கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது முழங்கால் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். அதன்பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றபோதும் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

தொடர்ந்து போராடி வந்த அவர், இப்போது மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் வென்றதன் மூலம் நம்பிக்கைப் பெற்றுள்ளார்.