Asianet News TamilAsianet News Tamil

இந்திய பிஸ்டல் சுடுதல் விளையாட்டின் தலைமை பயிற்சியாளர் காலமானார்…

indian pistol-shooter-game-chief-coach-died
Author
First Published Dec 14, 2016, 11:32 AM IST


இந்திய பிஸ்டல் சுடுதல் விளையாட்டின் தலைமை பயிற்சியாளர் செய்யது வாஜித் அலி (59) மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானார்.

புணேவின் சத்ரபதி சிவாஜி விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற்ற 60-ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நடுவராக செயல்பட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, ரைபிள் சுடுதலுக்கான இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும், போட்டி ஒருங்கிணைப்பாளருமான பவன் சிங் கூறியதாவது:

“நடுவராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த செய்யது வாஜித் அலிக்கு, இரவு 8 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றோம்.

எனினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் 9 மணியளவில் அறிவித்தனர் என்று பவன் சிங் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios