வாங்கியதை திருப்பி கொடுத்து வரலாறு படைக்குமா இந்தியா..?
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தது. 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று நடக்கிறது. நான்காவது போட்டியில் மழை மற்றும் மில்லருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளால் வெற்றியை இழந்த இந்திய அணி, இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.
இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அது வரலாற்று வெற்றியாக அமையும். இதுவரை தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றதே கிடையாது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை வெல்லும். அதன்மூலம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக இது அமையும்.
கடந்த போட்டியில் தோல்வியுற்றதால், இந்த போட்டியில் அதை திருப்பி கொடுக்க வேண்டும் என்பதில் இந்திய அணி உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளது.
எனவே தென்னாப்பிரிக்காவில் முதல் ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது. அதேநேரத்தில், சொந்த மண்ணில் தொடரை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு தொடரை வெல்லும் வாய்ப்பு இல்லாத நிலையில், இந்தியா வெல்ல முடியாத அளவிற்கு சமன் செய்ய வாய்ப்புள்ளது.
வரலாற்று வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?