Asianet News TamilAsianet News Tamil

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: முன்னணி வீராங்கனையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் உக்ரைனின் எலினா...

Brisbane International Tennis Ukraine player advanced to next level
Brisbane International Tennis Ukraine player advanced to next level
Author
First Published Jan 6, 2018, 12:23 PM IST


பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா.

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான ஸ்விடோலினாவும், உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர்.

இந்த ஆட்டத்தில் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் கரோலினாவை வீழ்த்தினார் ஸ்விடோலினா. இதன்மூலம், 4 முயற்சிகளில் முதல் முறையாக பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஸ்விடோலினா முன்னேறியுள்ளார்.

இறுதிச்சுற்றில் அவர் பெலாரஸின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சை எதிர்கொள்ள இருக்கிறார்.

முன்னதாக சாஸ்னோவிச், போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த லாத்வியாவின் அனஸ்தாஸிஜா செவஸ்டோவாவை 7-6(3), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios