badrinath opinion about this ipl season

ஐபிஎல் தொடர், கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகத்துடன் ஆதரவு அளித்துவருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. இதற்கான ஏலம் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. 

ஐபிஎல் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் அதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. இதுவரை நடந்துள்ள 10 தொடர்களில், மும்பை இந்தியன்ஸ் 3 முறையும், சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா இரண்டு முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.

பெங்களூரு, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகள் இதுவரை ஒருமுறை கூட வென்றதில்லை. இதுவரை வெல்லாத இந்த மூன்று அணிகளும் இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளனர்.

இந்நிலையில், ஐபிஎல் தொடர்பாக பேசியுள்ள சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை சென்னை அணி களமிறங்குகிறது. இந்த முறை சென்னை அணி அல்லது கொல்கத்தா அணி தான் கோப்பையை வெல்லும் என நினைக்கிறேன். சிறந்த வீரர்களை கொண்டுள்ள இந்த இரண்டு அணிகளில் ஒன்றுதான் இந்த முறை கோப்பையை வெல்லும் என பத்ரிநாத் தெரிவித்தார்.