Asianet News TamilAsianet News Tamil

மூன்றாவது ஓவருலயே ஆஸ்திரேலிய கேப்டனை புடுங்கி எறிந்த புவனேஷ்வர் குமார்!! ரோஹித்தின் அருமையான கேட்ச்சில் கேரியும் காலி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று காலை இந்திய நேரப்படி 7.50 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 
 

australia lost 2 wickets earlier in first odi against india
Author
Australia, First Published Jan 12, 2019, 8:48 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று காலை இந்திய நேரப்படி 7.50 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச்சும் அலெக்ஸ் கேரியும் களமிறங்கினர். தொடக்க ஜோடியை மூன்றாவது ஓவரிலேயே பிரித்தார் புவனேஷ்வர் குமார். மூன்றாவது ஓவரில் ஆரோன் ஃபின்ச்சை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் புவனேஷ்வர் குமார். கேப்டன் ஃபின்ச் 6 ரன்களில் வெளியேற, கேரியுடன் உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தார். 

australia lost 2 wickets earlier in first odi against india

இந்த ஜோடி 8 ஓவர்கள் நிலைத்தது. 5 பவுண்டரிகள் அடித்து அருமையாக ஆடிவந்த கேரியை புவனேஷ்வர் குமார் - கலீல் அகமது வேகப்பந்து கூட்டணியால் வீழ்த்த முடியவில்லை. இதையடுத்து 10வது ஓவரை குல்தீப் யாதவிடம் கொடுத்தார் கேப்டன் கோலி. அதன் பலனாக, பந்துவீச வந்த முதல் ஓவரிலேயே அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் யாதவ். குல்தீப் வீசிய பந்தில் கேரி கொடுத்த கேட்ச்சை ஸ்லிப்பில் நின்ற ரோஹித் சர்மா அருமையாக பிடித்தார். 

இதையடுத்து கவாஜாவுடன் ஷான் மார்ஷ் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். அந்த அணி 13 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios