Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு 3 பேருக்கு இடையே கடும் போட்டி

தலைமை பயிற்சியாளரை கபில் தேவ், கெய்க்வார், சாந்தா ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு தேர்வு செய்த நிலையில், பேட்டிங், பவுலிங்,ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான நேர்காணலை தேர்வுக்குழு நடத்தி முடித்துயுள்ளது. 

tough competition for team indias batting coach between 3 former cricketers
Author
India, First Published Aug 20, 2019, 10:31 AM IST

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2021 டி20 உலக கோப்பை வரை சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்வார். 

தலைமை பயிற்சியாளரை கபில் தேவ், கெய்க்வாட், சாந்தா ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு தேர்வு செய்த நிலையில், பேட்டிங், பவுலிங்,ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான நேர்காணலை தேர்வுக்குழு நடத்தி முடித்துவிட்டது. 

இவர்களில் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்பில்லை என்று தெரிகிறது. பரத் அருண் மீண்டும் பவுலிங் பயிற்சியாளராகவும், ஸ்ரீதர் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் தொடர்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் இந்திய அணியில் குறை சொல்லும்படி எதுவுமில்லை. இவர்கள் இருவருமே சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர். 

tough competition for team indias batting coach between 3 former cricketers

ஆனால் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தூக்கியெறியப்படுவது உறுதியாகிவிட்டது. சஞ்சய் பங்காரால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு 2 ஆண்டுகளாக தீர்வு காணமுடியவில்லை. அதன் எதிரொலியாக இந்திய அணி உலக கோப்பையில் தோற்க நேரிட்டது. பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விக்ரம் ரத்தோர், பிரவீன் ஆம்ரே, ஜோனாதன் ட்ராட், திலன் சமரவீரா ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். 

tough competition for team indias batting coach between 3 former cricketers

இவர்களில் விக்ரம் ரத்தோர், பிரவீன் ஆம்ரே மற்றும் ஹெட் கோச் பதவிக்கான போட்டியில் இருந்த லால்சந்த் ராஜ்பூட் ஆகிய மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்கள் மூவரில் ஒருவர்தான் கண்டிப்பாக பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் ரத்தோர் - பிரவீன் ஆம்ரேவிற்கு இடையேதான் கடும் போட்டி நிலவியதாக சொல்லப்பட்ட நிலையில், நேர்காணலுக்கு பிறகு ராஜ்பூட்டும் கடும் போட்டியாளராக திகழ்வதாக தகவல் வெளிவந்துள்ளது.

மூவருமே ஹை ப்ரொஃபைல் போட்டியாளர்கள். இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான விக்ரம் ரத்தோர், இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். பிரவீன் ஆம்ரே, ரஹானே உள்ளிட்ட சிறந்த வீரர்கள் சிலருக்கு ஏற்கனவே பயிற்சியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios