Asianet News TamilAsianet News Tamil

கோலி&கோ-விற்கு இதே வேலையா போச்சு..! ஐசிசி அதிரடி நடவடிக்கை

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

team india fined for slow overrate in last t20 against england
Author
Ahmedabad, First Published Mar 21, 2021, 10:03 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-1 என வென்றது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 36 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது.

இந்த போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. 2 ஓவர்கள் வீசுவதற்கான நேரத்தை இந்திய அணி அதிகமாக எடுத்துக்கொண்டதையடுத்து, இந்திய அணிக்கு 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

team india fined for slow overrate in last t20 against england

இந்திய வீரர்கள் அனைவருக்கும் போட்டி ஊதியத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி கேப்டன்சியில் இந்திய அணி ஏராளமான முறை பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டு அபராதம் கட்டியுள்ளது. குறிப்பாக எதிரணி பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி நன்றாக ஆடும்போதெல்லாம், கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios