#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் வர்ணனையாளர்கள் பெயர்கள் வெளியீடு
ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல்லை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வர்ணனையாளர்கள் பெயர்களை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் தொடங்குகிறது.
எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளதால், அனைத்து அணி வீரர்களும் அமீரகம் சென்று தீவிரமாக தயாராகிவருகின்றன.
இந்நிலையில், ஐபிஎல்லை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கான வர்ணனையாளர்கள் பெயர்களை அறிவித்துள்ளது.
ஆங்கில வர்ணனையாளர்கள்:
ஹர்ஷா போக்ளே, சுனில் கவாஸ்கர், லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், தீப்தாஸ் குப்தா, அஞ்சும் சோப்ரா, இயன் பிஷப், அலன் வில்கின்ஸ், எம்பாங்வா, நிகோலஸ் நைட், டேனி மோரிசன், சைமன் டௌல், மேத்யூ ஹைடன், கெவின் பீட்டர்சன்.
ஹிந்தி வர்ணனையாளர்கள்:
ஜதின் சப்ரு, சுரேன் சுந்தரம், ஆகாஷ் சோப்ரா, நிகில் சோப்ரா, தன்யா புரோஹித், இர்ஃபான் பதான், கௌதம் கம்பீர், பார்த்திவ் படேல், கிரன் மோர்.