Asianet News TamilAsianet News Tamil

கடைசி டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி.. ஆனால் அபார வெற்றி

இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை இழந்துவிட்டபோதிலும் கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
 

south africa beat india in last t20 but india wins series  by 2 1
Author
First Published Oct 4, 2022, 10:39 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி முதல் முறையாக இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை படைத்தது.

இந்தூரில் நடந்த கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. கேஎல் ராகுல், விராட் கோலி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு ஷ்ரேயாஸ் ஐயர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ். 

இதையும் படிங்க - தம்பி உஷார்.. மறுபடியும் நகர்ந்தா அவுட் பண்ணிடுவேன்! தென்னாப்பிரிக்க வீரரை மிரட்டிய தீபக் சாஹர்.. வைரல் வீடியோ
 
தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), டி காக் (விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வெய்ன் பர்னெல், ட்வைன் பிரிட்டோரியஸ், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா மீண்டும் சொதப்பினார். வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். இந்தூர் மைதானம் மிகச்சிறியது. அதைப்பயன்படுத்தி டி காக் மற்றும் ரைலீ ரூசோ ஆகிய இருவரும் அடித்து ஆடினர். இந்திய பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அடித்து நொறுக்கினார். 

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த குயிண்டன் டி காக் 43 பந்தில் 68 ரன்களை குவித்து ரன் அவுட்டாகி வெளியேறினார். டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் இந்தூரில் சிக்ஸர் மழை பொழிந்த ரைலீ ரூசோ 48 பந்தில் சதமடித்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 48 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 100 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார் ரூசோ. டேவிட் மில்லர் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி முரட்டுத்தனமாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் 227 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்க அணி.

228 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். 3ம் வரிசைஇல் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். லுங்கி இங்கிடி வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களை விளாசிய ரிஷப் பண்ட் அதே ஓவரில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள்.. ஆடம் கில்கிறிஸ்ட்டின் அதிரடி தேர்வு..! நம்பர் 1 இடத்தில் இந்திய வீரர்

அடுத்து தினேஷ் கார்த்திக்கும் அடித்து ஆடினார். 21 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 46 ரன்களை விளாசி தினேஷ் கார்த்திக்கும் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் மேட்ச் வின்னரும் முக்கியமான வீரருமான சூர்யகுமார் யாதவ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, பின்வரிசையில் தீபக் சாஹர் 17 பந்தில் 31 ரன்கள் அடித்து அவரும் ஆட்டமிழக்க, இந்திய அணி  178  ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆனாலும் 2-1 என இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை இந்திய அணி வென்றது. தொடரை இழந்த தென்னாப்பிரிக்க அணி, கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios