வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கிய நிலையில், இலங்கை வீரர்கள் இருவர் மற்றும் சமிந்தா வாஸ் ஆகிய மூவருக்கு கொரோனா உறுதியானது.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இன்று முதல் ஒருநாள் போட்டி நடந்துவருகிறது.
Add Asianetnews Tamil as a Preferred Source

இந்த போட்டிக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இலங்கை வீரர் ஷிரான் ஃபெர்னாண்டோவுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்தது.

கடந்த 18ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இலங்கை வீரர் இசுரு உடானா மற்றும் பயிற்சியாளர் சமிந்தா வாஸ் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியான நிலையில், கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.
இலங்கை வீரர் ஷிரான் ஃபெர்னாண்டோவுக்கு கொரோனா உறுதியானாலும், வங்கதேசம் - இலங்கை இடையேயான தொடர் திட்டமிட்டபடி நடந்துவருகிறது. இன்று முதல் ஒருநாள் போட்டி நடந்துவருகிறது.
