கண்ணாமூச்சி விளையாடும் சிறுத்தையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? சச்சின் வெளியிட்ட சிறுத்தை வீடியோ!
வன பகுதிக்கு சென்ற சச்சின் டெண்டுல்கர் சிறுத்தையின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் உலகில் கடவுள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று பல சாதனைகளை புரிந்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். எப்போதெல்லாம் வெளியில் செல்கிறாரோ அப்போதெல்லாம் புகைப்படம், வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அப்படி அவர் வெளியிட்டு வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வனப்பகுதிக்கு சென்றிருந்த சச்சின் டெண்டுல்கர் அப்போது, சிறுத்தையின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு, கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் சிறுத்தையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
உன் குத்தமா, என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல - ஆஸி., சுழலுக்கு சிக்கி சின்னா பின்னமான இந்தியா!
நாய்களை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அதனுடன் விளையாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதே போன்று உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக வாழ்நாள் முழுவதும் நாம் மாணவர்கள் தான். சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை மூலமாக குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் உள்பட பலவற்றை குறித்த கண்ணோட்டத்தை பெற இன்று அற்புதமான வாய்ப்பு. உலகின் சவால்களைத் தீர்க்க யோசனைகளை பகிர்ந்து கொள்வது ஒரு சக்திவாய்ந்த வழியாகும் என்று பதிவிட்டுள்ளார்.