Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு தகுதிபெறும்..! சச்சின் டெண்டுல்கர் அதிரடி

டி20 உலக கோப்பை அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதும் என்று சச்சின் டெண்டுல்கர் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

sachin tendulkar picks the semi finalists of t20 world cup
Author
First Published Oct 18, 2022, 11:00 AM IST

டி20 உலக கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டிகள் கடந்த 16ம் தேதி முதல் நடந்துவருகிறது. வரும் 22 முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன. சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்ற 8 அணிகள் பயிற்சி போட்டிகளில் ஆடிவருகின்றன.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். 

இதையும் படிங்க - ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் பாட் கம்மின்ஸ்..! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவலுவாக உள்ளது. அஷ்வின், அக்ஸர் படேல், சாஹல் என தரமான ஸ்பின்னர்களையும், புவனேஷ்வர் குமார், ஷமி, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகிய சிறந்த ஃபாஸ்ட்பவுலர்களையும் பெற்றுள்ளது. பும்ரா ஆடாததால் டெத் ஓவர் கவலை இருந்துவந்த நிலையில், ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டியில் கடைசி ஓவரில் துல்லியமான யார்க்கர்களை வீசி 3 விக்கெட் வீழ்த்தி 11 ரன்களை அடிக்கவிடாமல் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து நம்பிக்கை கொடுத்தார் ஷமி. எனவே இந்திய அணி மிக வலுவாக உள்ளது. 

இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளும் வலுவாக திகழ்கின்றன. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் (பாபர் அசாம் - முகமது ரிஸ்வான்), ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் ஆகியவை வலுவாக உள்ளது. மிடில் ஆர்டர் பேட்டிங் தான் பலவீனமாக உள்ளது. ஆனால் டாப் ஆர்டர் டபுள் வலுவாக இருப்பதால், கொஞ்சம் மேனேஜ் செய்து ஆடினால் பாகிஸ்தான் அணி மிகவலுவாக இருக்கும்.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் மிரட்டலான அணியாக திகழ்கிறது. பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், மொயின் அலி ஆகியோர் செம ஃபார்மில் அபாரமாக ஆடிவருகின்றனர். பவுலிங்கிலும் ரீஸ் டாப்ளி, மார்க் உட், டேவிட் வில்லி, சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷீத், கிறிஸ் ஜோர்டான் என சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறது. டி20 உலக கோப்பைக்கு முன் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரை வென்று மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் உள்ளனர்.

டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் குயிண்டன் டி காக், டேவிட் மில்லர் ஆகிய அதிரடி வீரர்கள் மிரட்டலான ஃபார்மில் உள்ளனர். ரபாடா, நோர்க்யா ஆகியோருடன் மார்கோ யான்செனும் பவுலிங்கிற்கு வலுசேர்ப்பார். ஸ்பின் பவுலிங்கில் ஷம்ஸி மற்றும் கேஷவ் மஹராஜ் வலுசேர்க்கின்றனர். எனவே டி20 உலக கோப்பையை வெல்வதற்கான போட்டி அணிகளுக்கு இடையே கடுமையாக இருக்கும்.

இதையும் படிங்க - T20 World Cup:ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டியில் ஷமிக்கு கடைசி ஒருஓவரை மட்டும் கொடுத்தது ஏன்? ரோஹித் விளக்கம்

இந்நிலையில், டி20 உலக கோப்பை குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் ஆருடம் தெரிவித்துவரும் நிலையில், சச்சின் டெண்டுல்கரும் ஆருடம் தெரிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று ஆருடம் தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios