Asianet News TamilAsianet News Tamil

ரோஹித் சர்மா அதிரடி அரைசதம்.. இந்திய அணிக்கு அபார தொடக்கம்! முதல் விக்கெட்டை வீழ்த்தவே முக்கும் இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில்  முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அரைசதம் அடித்துள்ளார்.
 

rohit sharma scores fifty and indian openers set very good platform in first innings of second test
Author
London, First Published Aug 12, 2021, 7:12 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

ஆட்டம் மழையால் பதினைந்து 25 நிமிடம் தாமதமாக தொடங்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு முன் மீண்டும் 10 நிமிட ஆட்டமும், உணவு இடைவேளைக்கு பின் 10 நிமிடமும் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

மழை ஏற்படுத்திய தடைகளையும் மீறி, இங்கிலாந்து பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிவருகிறது இந்திய அணியின் தொடக்க ஜோடி. ரோஹித்தும் ராகுலும் மிகத்தெளிவாகவும் நிதானமாகவும் ஆடி களத்தில் செட்டில் ஆனார்கள். ரோஹித் சர்மா பவுண்டரிகளை அடித்து ஆட, ராகுல் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிவருகிறார்.

rohit sharma scores fifty and indian openers set very good platform in first innings of second test

வேகமாக ஆடி ஸ்கோர் செய்த ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின் சிக்ஸர் விளாசிய ரோஹித் சர்மா, 2 பவுண்டரிகளையும் அடித்தார். இந்திய அணி 30 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணிக்கு கடந்த போட்டியை போலவே, இந்த போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. ரோஹித்தும் ராகுலும் இணைந்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios