Asianet News TamilAsianet News Tamil

IND vs SA: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! ரவி சாஸ்திரியின் அதிரடி தேர்வு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
 

ravi shastri picks team india playing eleven for the first t20 against south africa
Author
Chennai, First Published Jun 6, 2022, 3:45 PM IST

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 9ம் தேதி முதல் டி20 போட்டி நடக்கிறது.

இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோஹித், கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனவே கேஎல் ராகுலின் கேப்டன்சியில் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார்.

முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ருதுராஜ் ஆகிய இருவரையும், கோலி ஆடாததால் 3ம் வரிசை வீரராக இஷான் கிஷனையும், 4ம் வரிசை வீரராக ஷ்ரேயாஸ் ஐயரையும் தேர்வு செய்துள்ளார் ரவி சாஸ்திரி. விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டையும், ஃபினிஷராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவையும், ஸ்பின்னர்களாக அக்ஸர் படேல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகிய இருவருடன் 3வது ஃபாஸ்ட் பவுலராக அர்ஷ்தீப் சிங் - உம்ரான் மாலிக் ஆகிய இருவரில் யாராவது ஒருவரை எடுக்கலாம் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ரவி சாஸ்திரி தேர்வு செய்த முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்:

கேஎல் ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்/உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios