ஃபார்மில் இல்லாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக திணறிவரும் விராட் கோலி, ஐபிஎல்லிலும் திணறிவரும் நிலையில், அவருக்கு இந்திய அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலும் ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார். 

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவரும் விராட் கோலி, பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்தும், ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார்.

ஆனாலும் பேட்டிங்கில் அவரால் இன்னும் பெரிய ஸ்கோர் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்ள நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது. 

ஐபிஎல்லில் விராட் கோலி எப்படி ஆடுகிறார், ஃபார்முக்கு திரும்பி தெறிக்கவிடுகிறாரா என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல்லிலும் கோலியின் மோசமான ஃபார்ம் தொடர்ந்துவருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 11 போட்டிகளில் ஆடி 216 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் கோலி. 

விராட் கோலி மட்டுமல்லாது ரோஹித் சர்மாவும் ஐபிஎல்லில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகிறார். இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியின் முக்கியமான வீரர்களான ரோஹித் மற்றும் விராட் ஆகிய இருவரும் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாதது கவலையளிக்கும் நிலையில், விராட் கோலிக்கு பலரும் பல அறிவுரைகளை வழங்கிவருகின்றனர்.

அந்தவகையில், ரவி சாஸ்திரி கூறிய அதே அறிவுரையை எம்.எஸ்.கே.பிரசாத் வழங்கியுள்ளார். விராட் கோலி ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரி அறிவுறுத்தியிருந்த நிலையில், அதே அறிவுரையை எம்.எஸ்.கே.பிரசாத்தும் வழங்கியுள்ளார். இதுகுறித்து கருத்து கூறிய பிரசாத், விராட் கோலி ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு ஃப்ரெஷ்ஷாகி திரும்ப வர வேண்டும் என்று பிரசாத் தெரிவித்துள்ளார்.