Asianet News TamilAsianet News Tamil

ஆஸி.,யை எப்படி அதன் சொந்த மண்ணில் வீழ்த்தினோமோ, அதேமாதிரி இங்கிலாந்தையும் வீழ்த்துவோம்! இந்திய வீரர் நம்பிக்கை

ஆஸ்திரேலிய அணியை எப்படி அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதோ, அதேபோலவே இங்கிலாந்து மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்வோம் என்று முகமது சிராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

mohammed siraj believes team india will beat england in test series
Author
Nottingham, First Published Aug 2, 2021, 4:45 PM IST

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. முதல் போட்டி நாட்டிங்காமில் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. கடந்த 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, இம்முறை டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுவிடுவோம் என்று இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள முகமது சிராஜ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எனக்கு நிறைய கற்றுத்தந்தது. ரஹானாவின் கேப்டன்சியில் ஆடியது அருமையான அனுபவம். அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று கோப்பையை தூக்கிய அந்த தருணம் அபாரமானது. அந்தவொரு குறிப்பிட்ட நாளை நினைத்தால் இப்போதும் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. கோப்பையை வென்றுவிட்டு, ஒரு அணியாக அதை கொண்டாடும் உணர்வு சிறப்பானது.

 ஆஸ்திரேலியாவில் எப்படி அந்த அணியை வீழ்த்தினோமோ, அதேமாதிரி இங்கிலாந்து மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்வோம். எனக்கு கொஞ்சம் கூட பதற்றம் இல்லை. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். எங்கள் அணியில் நட்சத்திர வீரர்களை எல்லாம் பெற்றிருக்கிறோம்.

விராட் கோலியின் கேப்டன்சியில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இங்கிலாந்து மண்ணில் விராட் கோலியின் கேப்டன்சியில் கோப்பையை தூக்க ஆர்வமாக உள்ளேன்.  எங்கள் அணி வலுவாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான பெரிய தொடருக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios