Asianet News TamilAsianet News Tamil

IPL 2022: லக்னோ அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு..! என்ன பெயர், எப்படி இருக்குனு பாருங்க

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக ஆடவுள்ள லக்னோ அணி, அதன் அதிகாரப்பூர்வ பெயரை அறிவித்துள்ளது.
 

lucknow franchise officially announce its name as lucknow supergiants
Author
Chennai, First Published Jan 24, 2022, 8:17 PM IST

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைவதால் 10 அணிகள் இந்த சீசனில் ஆடவுள்ளன. இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தன. 

மெகா ஏலத்துக்கு முன்பாக புதிய அணிகள் இரண்டும் தலா 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம். அதன்படி, லக்னோ அணி கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும், அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் எடுத்துள்ளன.

ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்தில் பெரிய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதால் இந்த ஏலத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 896 இந்திய வீரர்கள் மற்றும் 318 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1214 வீரர்கள் அவர்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். 

வரும் பிப்ரவரி 12-13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் நடக்கவுள்ளது. மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளன. 

ஐபிஎல் சூடுபிடித்துவிட்ட நிலையில், புதிதாக ஆடவுள்ள லக்னோ அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் பெயரை அறிவித்துள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்று லக்னோ அணிக்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதாக சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார். ரசிகர்களிடம் கருத்து கேட்கப்பட்டதற்கு, அதிகமானோர் இந்த பெயரை பரிந்துரைத்ததாகவும், அதனால் தான் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என பெயர் சூட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சஞ்சீவ் கோயங்காவின் பழைய ஐபிஎல் அணியான புனே அணிக்கும் இதே பெயர் தான், சற்று வேறு மாதிரியாக சூட்டப்பட்டிருந்தது. ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்று பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios