Asianet News TamilAsianet News Tamil

இந்த பையன் தான் எதிர்காலத்தில் உலகின் நம்பர் 1 டி20 வீரர்! T20 WC அணியில் எடுத்தே தீரணும்.. ஸ்ரீகாந்த் அதிரடி

இந்திய அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் தான் எதிர்காலத்தில் உலகின் நம்பர் 1 வீரர் என்றும் அதனால் அவரை டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக எடுத்தே தீரவேண்டும் என்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
 

krishnamachari srikkanth wants to see arshdeep singh in team india for t20 world cup
Author
Chennai, First Published Aug 4, 2022, 6:58 PM IST

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு அமீரகத்தில் தவறவிட்ட டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியாவில் தூக்கவேண்டும் என்ற உறுதியில் இருக்கிறது இந்திய அணி.

இந்த முறை ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. கோப்பையை வெல்லும் வித்தையை அறிந்தவர் ரோஹித் சர்மா. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டன் ரோஹித். 

ரோஹித் சர்மா தலைமையிலான டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. விராட் கோலி ஃபார்மில் இல்லாத நிலையில், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இதையும் படிங்க - இதெல்லாம் நல்லதுக்கு இல்லப்பா; ரொம்ப தப்பு.. கேப்டன் ரோஹித்தை எச்சரிக்கும் ரவி சாஸ்திரி

அதேபோல பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்ஷல் படேல் தவிர, ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்களுக்கு இடையேயும் போட்டி நிலவுகிறது. எனவே டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி எதுவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில், இந்திய அணியின் 23 வயதே ஆன இளம் ஃபாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங்கை கண்டிப்பாக டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 4 டி20 போட்டிகளில் ஆடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அர்ஷ்தீப் சிங், அதில் 5 விக்கெட்டுகளை டெத் ஓவர்களில் வீழ்த்தியுள்ளார். டெத் ஓவர்களில் 6.35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ள அர்ஷ்தீப், 13 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி தான் கொடுத்திருக்கிறார்.

இடது கை இளம் ஃபாஸ்ட் பவுலரான அர்ஷ்தீப் சிங், தனது அபாரமான பவுலிங்கால் அணி நிர்வாகம், தேர்வாளர்கள் மற்றும் முன்னாள் ஜாம்பவான்களின் அபிப்ராயத்தை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க - WI vs IND: 4வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! என்னென்ன மாற்றங்கள்..?

இந்நிலையில், அர்ஷ்தீப் குறித்து பேசியுள்ள கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அர்ஷ்தீப் சிங் தான் எதிர்காலத்தில் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 பவுலர். மிகச்சிறந்த பவுலர் அவர். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவர் கண்டிப்பாக இருப்பார். சேத்தன் ஷர்மா, அர்ஷ்தீப்பை அணியில் எடுப்பா என்று ஸ்ரீகாந்த் தனது நண்பரும் இந்திய அணி தலைமை தேர்வாளருமான சேத்தன் ஷர்மாவுக்கு மெசேஜ் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios