அவரோட பேட்டிங்கில் நான் என்னையே பார்க்குறேன்.. ரொம்ப நேர்மையா நேரடியா பதில் சொன்ன ஜெயவர்தனே
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் எல்லா காலத்திலும் டாப் 10 தலைசிறந்த வீரர்களில் ஒருவருமானவர் மஹேலா ஜெயவர்தனே.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் எல்லா காலத்திலும் டாப் 10 தலைசிறந்த வீரர்களில் ஒருவருமானவர் மஹேலா ஜெயவர்தனே.
ஜெயவர்தனே 1997ம் ஆண்டிலிருந்து 2015 வரை இலங்கை அணியில் ஆடினார். சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட ஜெயவர்தனே, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் டாப் 10 இடங்களுக்குள் இருக்கிறார்.
இலங்கை அணிக்காக 448 ஒருநாள் போட்டிகளில் 12,650 ரன்களையும் 149 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 11,814 ரன்களையும் குவித்துள்ளார். 2015ம் ஆண்டு ஓய்வு பெற்ற ஜெயவர்தனே, ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்துவருகிறார்.
அனைத்து காலத்திலும் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் ஜெயவர்தனேவிடம், சமகாலத்து வீரர்களில் யாரிடம் அவரை காண்கிறார் என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயவர்தனே, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் பேட்டிங்கில் தன்னை காண்பதாக ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
கேன் வில்லியம்சன் சமகால சிறந்த வீரர்களாக திகழும் நால்வரில் ஒருவர். வில்லியம்சன், சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட நல்ல பேட்ஸ்மேன் மட்டுமல்லாது சிறந்த கேப்டனும் கூட. உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.