#ENGvsIND முதல் டெஸ்ட்: முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை தட்டி தூக்கிய பும்ரா..! மிரட்சியில் இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார் ஜஸ்ப்ரித் பும்ரா.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.
இங்கிலாந்து அணி:
ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஆலி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸும் டோமினிக் சிப்ளியும் இறங்கினர். இந்திய அணி சார்பில் பும்ரா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் 5வது பந்திலேயே ரோரி பர்ன்ஸை ரன்னே அடிக்கவிடாமல் எல்பிடபிள்யூ செய்து வீழ்த்தினார் பும்ரா.
இங்கிலாந்து அணி ரன் கணக்கை தொடங்கும் முன்பே, முதல் ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்தி அருமையாக தொடங்கினார் பும்ரா. முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணியில், அடுத்ததாக 3ம் வரிசையில் களத்திற்கு வந்த ஜாக் க்ராவ்லி, டோமினிக் சிப்ளியுடன் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.