Asianet News TamilAsianet News Tamil

#INDvsENG சீட்டுக்கட்டு போல் சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்..! சூப்பரா ஆடி மானம் காத்த புஜாரா - பண்ட்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், 4 விக்கெட்டுகளை மளமளவென இழந்த இந்திய அணியை புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் இணைந்து காப்பாற்றினர்.
 

india lost early 4 wickets pujara and rishabh pant save team india in first test against england
Author
Chennai, First Published Feb 7, 2021, 3:30 PM IST

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் சென்னையில் நேற்று தொடங்கிவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் இரட்டை சதம்(218), சிப்ளி(87), ஸ்டோக்ஸின்(82) சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 578 ரன்களை குவித்தது. 3ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் இங்கிலாந்து அணி கடைசி 2 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது.

india lost early 4 wickets pujara and rishabh pant save team india in first test against england

அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 6 ரன்னில் ஆட்டமிழக்க, ஷுப்மன் கில் 29 ரன்னிலும், கேப்டன் கோலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். துணை கேப்டன் ரஹானேவும் வெறும் ஒரு ரன்னில் நடையை கட்ட, 73 ரன்களுக்கே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த புஜாராவும் ரிஷப் பண்ட்டும் சேர்ந்து சிறப்பாக பேட்டிங் ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 119 ரன்களை சேர்த்தது. இருவருமே அரைசதம் அடித்த நிலையில் புஜாரா 73 ரன்னில் ஆட்டமிழந்தார். 72 ரன்களுடன் களத்தில் இருக்கும் ரிஷப் பண்ட்டுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios