ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 101 ரன்களுக்கே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், தவானுடன் இணைந்து ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடிவருகிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் சதமடித்தார். வார்னர் 69 ரன்கள் அடித்தார். இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த நிலையில், அதைப்பயன்படுத்தி ஸ்மித்தும் மேக்ஸ்வெல்லும் இணைந்து பொளந்துகட்டினர். அதிரடியாக ஆடிய ஸ்மித் 62 பந்தில் சதமடிக்க, மேக்ஸ்வெல் 19 பந்தில் 45 ரன்களை விளாசினர். வார்னர், ஃபின்ச், ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் 50 ஓவரில் 374 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.
375 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும் மயன்க் அகர்வாலும் இறங்கினர். இருவரும் இணைந்து அதிரடியாக தொடங்கிய நிலையில், மயன்க் அகர்வால் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கோலி 21 பந்தில் 21 ரன்கள் மட்டுமே அடித்து ஹேசில்வுட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களிலும், கேஎல் ராகுல் 12 ரன்களிலும் வெளியேற, 13.3 ஓவரில் 101 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் நிலைத்து ஆடிய தவான் அரைசதம் அடித்தார். 4 விக்கெட்டுக்கு பிறகு தவானுடன் ஜோடி சேர்ந்த அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலிய பவுலர்களின் பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் பாண்டியாவும் அரைசதம் அடிக்க, இருவரும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர்.
பாண்டியா நல்ல ஃப்ளோவில் அடி வெளுத்துவாங்கிவருகிறார். பாண்டியாவும் தவானும் இதேபோல அதிரடியை தொடர்ந்தால் வெற்றிக்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 27, 2020, 4:21 PM IST