டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 171 ரன்களை குவித்து, 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி புனேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ஷுப்மன் கில், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, அபினவ் மனோகர், ரஷீத் கான், லாக்கி ஃபெர்குசன், வருண் ஆரோன், முகமது ஷமி.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, டிம் சேஃபெர்ட், மந்தீப் சிங், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், ஷர்துல் தாகூர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், கலீல் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் ஒரு ரன்னில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க, விஜய் சங்கர் 20 பந்தில் 13 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடக்கம் முதலே அடித்து அதிரடியாக ஆடிய ஷுப்மன் கில் 46 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ராகுல் டெவாட்டியா 8 பந்தில் 14 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 20 ஓவரில் 171 ரன்கள் அடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 172 ரன்கள் என்ற இலக்கை டெல்லி கேபிடள்ஸ் அணி விரட்டிவருகிறது.
