Asianet News TamilAsianet News Tamil

பென்ச்சில் உட்காரவைப்பது தீர்வல்ல; இன்னொரு சான்ஸ் கொடுங்க.. சூப்பர் வீரருக்கு ஆதரவாக குரல் கொடுத்த கம்பீர்

எந்த வீரரும் சரியாக ஆடவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குவது மட்டுமே தீர்வாகாது; கூடுதல் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேஎல் ராகுல் விஷயத்தில் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

gautam gambhir opines team india should give more opportunities to kl rahul
Author
Ahmedabad, First Published Mar 21, 2021, 7:28 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-2 என வென்றது. முதல் 4 போட்டிகளிலும் தொடக்க வீரர் கேஎல் ராகுல், 2 போட்டிகளில் டக் அவுட்டானார். மற்ற 2 போட்டிகளில் சேர்த்தே 15 ரன்கள் மட்டுமே அடித்தார். 

இதையடுத்து கடைசி டி20 போட்டியில் ராகுலை நீக்கிவிட்டு கூடுதல் பவுலராக நடராஜன் சேர்க்கப்பட்டார். அதனால் ரோஹித்துடன் கோலியே தொடக்க வீரராக இறங்கினார். அணியின் சீனியர் வீரர்களான ரோஹித்தும் கோலியும் தொடக்க வீரர்களாக இறங்கி அபாரமாக ஆடினர். இருவரும் தங்கள் அனுபவத்தை பயன்படுத்தி அருமையாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்களை குவித்தனர். ரோஹித் இந்த போட்டியில் 34 பந்தில் 64 ரன்களும், கோலி 52 பந்தில் 80 ரன்களும் குவித்தனர்.

gautam gambhir opines team india should give more opportunities to kl rahul

ரோஹித்தும் கோலியும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுக்க, அதைக்கண்ட கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் சிலர் டி20 உலக கோப்பையிலும் அவர்கள் இருவருமே டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களாக இறங்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த கம்பீர், சரியாக ஆடாத வீரரை அணியிலிருந்து நீக்கி பென்ச்சில் உட்கார வைப்பது ஒருபோதும் தீர்வாகாது; கூடுதல் வாய்ப்பளிப்பதன் மூலம் மட்டுமே தீர்வு. எனவே ராகுலுக்கு ஒருநாள் போட்டிகளில் ஆட வாய்ப்பளிக்க வேண்டும் என்று கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios