Asianet News TamilAsianet News Tamil

வெறித்தனமான பாகிஸ்தான் ரசிகர் ஒருவரின் முரட்டு செயல்!! ஒட்டுமொத்த டீமே அதிர்ச்சியில் ஆழ்ந்த தரமான சம்பவம்

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி படுமோசமாக ஆடிவருகிறது. உலக கோப்பையில் மட்டுமல்ல; சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் பாகிஸ்தான் அணி சரியாக ஆடவேயில்லை.
 

fan filed a case in court to ban pakistan team
Author
England, First Published Jun 22, 2019, 9:58 AM IST

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி படுமோசமாக ஆடிவருகிறது. உலக கோப்பையில் மட்டுமல்ல; சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் பாகிஸ்தான் அணி சரியாக ஆடவேயில்லை.

உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே பாகிஸ்தான் வென்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி வென்றது. ஆனால் இலக்கை விரட்டிய எந்த போட்டியிலும் வெல்லவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் வெறும் 105 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட்டானது. 

இந்திய அணிக்கு எதிராக போராடமலேயே தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணியிடம் டீம் ஸ்பிரிட்டே இருப்பது போன்று தெரியவில்லை. அந்த அணி இந்தியாவுக்கு எதிராக போராடாமல் மோசமாக தோற்றது. 

பாகிஸ்தான் அணி படுமோசமாக இருப்பதற்கு வலுவான கேப்டன் இல்லாததும் ஒரு காரணம். சர்ஃபராஸ் அகமது உத்தி ரீதியாகவும் கள வியூகத்திலும் கைதேர்ந்தவராக இல்லை. இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்தனர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் வீரர்கள் வைத்து செய்யப்பட்டனர். 

fan filed a case in court to ban pakistan team

குறிப்பாக கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி, ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த கேப்டன் சர்ஃபராஸை, மூளையில்லாத கேப்டன் என ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்திருந்தார். 

பாகிஸ்தான் வீரர்கள், எங்களை விட்ருங்க என்று கெஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள், தற்போதைய அணியை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர். 

பாகிஸ்தான் அணியை மேம்படுத்த பாகிஸ்தானின் பிரதமரும் உலக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் காம்ரான் அக்மல் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

ரசிகர்கள் அனைவரும் விமர்சனங்களுடன் நின்றுவிட, ஒரேயொரு ரசிகர் மட்டும் பாகிஸ்தான் அணிக்கு செம அதிர்ச்சியளித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கக்கோரியும் இன்சமாம் உல் ஹக் தலைமையிலான தேர்வுக்குழுவை கலைக்கக்கோரியும் ரசிகர் ஒருவர் குஜ்ரன்வாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

fan filed a case in court to ban pakistan team

அவரது வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக விளக்கமளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் அணியை தடை செய்யக்கோரி ரசிகர் ஒருவர் வழக்கு தொடர்ந்த விஷயம் வீரர்களுக்கு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios