Asianet News TamilAsianet News Tamil

IND vs ENG 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து – இன்னும் 205 ரன்கள் தேவை!

இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

England lost 6 Wickets in 4th Day and Struggle to score runs against India in 2nd Test Match at Vizag rsk
Author
First Published Feb 5, 2024, 12:06 PM IST

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 396 ரன்களும், இங்கிலாந்து 253 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 143 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்ஸ் விளையாடியது. இதில், தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஷ்ரேயாஸ் ஐயரும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். அதன் பிறகு அவரும் 29 ரன்களில் நடையை கட்டினார். அக்‌ஷர் படேல் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் எதிர்காலமே யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் தான் – வீரேந்திர சேவாக் பாராட்டு!

சுப்மன் கில் நிதானமாக விளையாடி 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 29 ரன்கள் எடுக்க இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக 398 ரன்கள் குவித்து 399 ரன்களை இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் டாம் ஹார்ட்லி 4 விக்கெட் கைப்பற்றினார். ரெஹான் அகமது 3 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும், சோயிப் பஷீர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 399 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.

IND vs ENG Test: வெற்றியை நோக்கி டிராவல் பண்ணும் இங்கிலாந்து: முட்டுக்கட்டை போடும் ரவிச்சந்திரன் அஸ்வின்!

இதில், ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி புதிய பந்தில் பவுண்டரியாக அடித்து ரன்கள் குவித்தனர். ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகேஷ் குமார் இருவரும் மாறி மாறி ஓவர்கள் வீச துணிச்சலாக பவுண்டரியாக விளாசினர். இதையடுத்து விக்கெட் எடுக்க குல்தீப் யாதவ்வை கொண்டு வந்தார்.

சுப்மன் கில்லின் சதம் – இங்கிலாந்துக்கு 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த டீம் இந்தியா!

அவரும் விக்கெட் எடுக்காத நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்‌ஷர் படேல் இருவரும் மாறி மாறி பந்து வீசினர். இதில், அஸ்வின் விக்கெட் எடுத்துக் கொடுத்தார். இதையடுத்து 4ஆவது நாளான இன்று ரெஹான் அகமது 23 ரன்களில் அக்‌ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆலி போப் அஸ்வின் பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

7 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்மன் கில், நம்பர் 3ல் சதம் விளாசி சாதனை!

உணவு இடைவேளைக்கு முன் இங்கிலாந்து வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றனர். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 205 ரன்கள் தேவை. கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. இதில், அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 73 ரன்கள் எடுத்தார். அஸ்வின் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல் மற்றும் பும்ரா ஆகியோர் தலா ஒரு  விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios